--> -->

கேர்ணல் திலிப சேரசிங்க எழுதிய 'யுக யுக' புத்தக வெளியீட்டு விழாவில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

பெப்ரவரி 10, 2024

இராணுவ பொலிஸ் படையணியின் கேர்ணல் திலிப சேரசிங்க அவர்களினால் எழுப்பட்ட ‘யுக யுக’ எனும் புத்தக வெளியிட்டு விழா நேற்று (பெப்ரவரி. 9) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நூல் கிமு 103 ஆம் ஆண்டு வலகம்பா வம்சத்தின் காலத்தில் நடந்த புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியின் உரையை ஆற்றிய பாதுகாப்புச் செயலாளர், யுத்த காலத்தில் கேர்ணல் திலிப சேரசிங்கவுடன் தாம் செலவிட்ட காலத்தை நினைவு கூர்ந்ததோடு, அவரிடம் உள்ள சிறந்த நற்குணங்கள் மற்றும் திறமையையும் பாராட்டினார்.

பல சிறப்பம்சங்கள் கொண்ட மாபெரும் நிகழ்வாக இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழாவில் சிரேஷ்ட பேராசிரியர் அத்தநாயக்க எம்.ஹேரத் சிறப்புரையாற்றியதுடன், விரிவுரையாளர் அஜித் கிருஷாந்த சேரம் நூல் விமர்சனயுரையை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரீந்திர பீரிஸ், இராணுவத்தின் பிரதி பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன், இராணுவ பொலிஸ் படையணியின் கேர்ணல் நிலைக்கான கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கிளிஃபோர்ட் டி சொய்சா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர ஆகியோர் கலந்துகொண்டனர்