--> -->

இலங்கை கடற்படை கப்பல் சமுதுர முத்தரப்பு கடலோர காவல் கடற்படை பயிற்சி ‘EX – DOSTI – XVI’ இல் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டது

பெப்ரவரி 21, 2024

‘EX – DOSTI – XVI’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி 2024 பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மாலத்தீவு கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதுடன், இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இதில் பங்கேற்பதற்காக இன்று (20 பெப்ரவரி 2024) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குதல், நட்பை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் இயங்கும் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, முத்தரப்பு கடற்படைப் பயிற்சியான ‘EX – DOSTI – XVI’ மாலத்தீவு கடற்கரையை மையமாகக் கொண்டு 22 பிப்ரவரி 2024 ஆம் திகதி தொடங்குகிறது.

இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர புறப்படுவதற்கு முன்னர், மேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் தம்மிக்க விஜேவர்தன ‘EX – DOSTI – XVI’ பயிற்சியில் பங்குகொள்ளவுள்ள இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுரவின் கட்டளை அதிகாரி கப்டன் நலிந்த குமாரவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், கடல்சார் செயற்பாடுகள் தொடர்பான புதிய அறிவு, மூலோபாய உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, கடல் பிராந்தியத்தில் புதிய கடல்சார் சவால்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை கூட்டாகக் கண்டறிவது போன்ற பல நன்மைகளை இலங்கை கடற்படை பெறுகிறது.

நன்றி- www.navy.lk