--> -->

இலங்கை சாரணர் சங்கப் பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்

ஏப்ரல் 02, 2024

இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் ஜனாபிரித் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் இன்று (ஏப்ரல் 02) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அண்மையில் நடத்தப்பட்ட 10வது தேசிய சாரணர் ஜம்போரியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காக பிரதம ஆணையாளர் பெர்னாண்டோ பாதுகாப்புச் செயலாளருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பிரதம ஆணையாளர் மற்றும்  பிரிகேடியர் ஜே.பி.ஏ.ஜயவர்தன ஆகியோரால் ஜெனரல் குணரத்னவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

10வது தேசிய சாரணர் ஜம்போரி 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை திருகோணமலையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.