--> -->

தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்

டிசம்பர் 31, 2020

தேசிய மாணவர் படையணியின் 13ஆவது பணிப்பாளராக மேஜர் ஜெனரல (ஓய்வு) பி.டபிள்யு.பீ  ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் பி.டபிள்யு.பீ ஜயசுந்தர தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடமிருந்து பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (டிச 31) பெற்றுக் கொண்டார்.

தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஜே ஆர் குலதுங்கவை அடுத்தே தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) பி . டபிள்யு . பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.