'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் தொடக்க விழாவில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பங்கேற்றார்

மே 15, 2025

கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் தொடக்க விழா நேற்று (மே 14) மாலை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கலந்து கொண்டார்.

பௌத்த பண்டிகைகளில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் வெசாக் பண்டிகை, பௌத்த சமூகத்தினரிடையே ஆன்மீக மறுமலர்ச்சி, கலாச்சார பண்பாடு மற்றும் சகவாழ்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் பல்வண்ண வடிவங்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெசாக் காலை அலங்காரங்கள், வெசாக் பக்தி பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் வெசாக் வலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல்களையும் (இலவச உணவு கூடங்கள்) உள்ளடக்கியுள்ளது. மே 13 ஆம் தேதி ஆரம்பித்த இந்த வெசாக் மண்டலம், கொழும்பில் உள்ள கங்காராமய விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகத்தை மையமாகக் கொண்டு 16 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
மூன்றாம் நாள் திறப்பு விழாவில் கங்காராமய விகாராதிபதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அசாஜி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் கலந்து கொண்டனர். தொழில் அமைச்சர் கௌரவ அனில் ஜயந்த பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், தொழிற்கல்வி பிரதி அமைச்சர் கௌரவ நளின் ஹேவகே, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் கௌரவ சுனில் வட்டகல, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் கௌரவ முகமது முனீர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜெயசேகர (ஓய்வு), நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள், சிரேஷ்ட அரசு அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வருடாந்திர நிகழ்வின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், நடலாவரீதியில் ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் மண்டலம் இலங்கையின் பௌத்த பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகவும் அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.