தேசிய நீர்வரைவியலாளர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
மே 27, 2025இலங்கையின் தேசிய நீர்வரைவியலாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, திங்கட்கிழமை (மே 26) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் நீர்வரைவியல் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டத்துடன் இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும், இது இந்தத் துறையில் தேசிய கடமைகளை நிறைவேற்றும் அதேசமயம் பிராந்திய தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய சிறந்த நிலையை இந்த நாடு அடைவதை உறுதி செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் ஒரு முன்னோடி பங்குதாரராக இருப்பதை உறுதி செய்யம் வகையில் நீர்வரைவியல் துறையை ஒரு மூலோபாய தேசிய முன்னுரிமையாக மேம்படுத்துவதற்கான பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான ஆதரவு இங்கு வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.