இந்தோனேசிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
மே 27, 2025இந்தோனேசிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திருமதி. தேவி குஸ்டினா டோபிங், இன்று (மே 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இருவரும் பரஸ்பர முக்கியத்துவம் மிக்க விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். குறிப்பாக இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினர். பிராந்திய பாதுகாப்பு இயக்கவியல், கூட்டு பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஈடுபாடுகளை மேம்படுத்துதல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், இரு அரசாங்கங்களின் பகிரப்பட்ட முன்னுரிமைகள், குறிப்பாக ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளில் இந்தோனேசியாவின் வலுவான அர்ப்பணிப்பு குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவுக்கு பிரதி அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொதுவான சவால்களை எதிர்கொள்ள பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை நெருக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் இந்தோனேசியாவின் முக்கிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான இந்தோனேசியாவின் உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகர் டோபிங் உறுதிப்படுத்தி, கூட்டு முயற்சிகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் தகவல் பகிர்வு மூலம் இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த முடியம் என நம்பிக்கை தெரிவித்தார். விவசாயம், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை மேம்பாடுகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தோனேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் கூட்டாண்மையை பிரதிபலிக்கும் வகையில், உயர் மட்ட பரிமாற்றங்களைத் தொடரவும், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.