இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
ஜூன் 05, 2025புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திருமதி மகேஷிகா கொலோன்னே, இன்று (ஜூன் 5) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளர் திருமதி கொலோனைவை அன்புடன் வரவேற்று, அவரது புதிய நியமனம் தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, திருமதி கொலோன்னே வெளியுறவு அமைச்சில் பலதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.