கடற்படை இதுவரை 3,564 உயிர்காக்கும் இரத்தமாற்ற கருவிகளை வழங்கியுள்ளது
ஜூன் 11, 2025இலங்கை கடற்படை (SLN) இதுவரை 3,564 செலவு குறைந்த தலசீமியா உட்செலுத்துதல் கருவிகளை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது, குருதிவளிக்காவியின் உருவாக்கத்தில் குறைபாடு ஏற்படும் மரபணு சார்ந்த குருதி நோய் ஆகும். இதற்கு தொடர்ச்சியான இரத்தமாற்றம் அவசியமாகும். இதன்போது முக்கிய உறுப்புகளில் எற்படும் அதிகப்படியான இரும்புச்சத்து படிவை நீக்க சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். இச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் குருதி உட்செலுத்துதல் கருவி, நோயாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு உயிர்நாடியாகும்.
இவ்வாறான இறக்குமதி செய்யப்பட்ட கருவியொன்றின் விலை, ரூ. 75,000 முதல் ரூ. 100,000 வரை உள்ளத்துடன், இது பல குடும்பங்களுக்கு கொள்வனவு செய்ய முடியாது. இந்த முக்கியமான சுகாதாரத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், SLN ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு 2011 இல் உள்நாட்டில் இக்கருவியை உத்பத்திசெய்ய ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படையின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில், வெறும் ரூ. 9,000 என்ற விலையில் மிகவும் செயல்பாட்டுடன் கூடிய தலசீமியா கருவியை உருவாக்குவதில் இந்தக் குழு வெற்றி பெற்றது. இந்த அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. கடற்படை இக்கருவிகளுக்கான பழுதுபார்ப்பு சேவையையும் வழங்குகிறது. அத்துடன் சமீபத்தில் 400 தலசீமியா கருவிகள் நன்கொடையாக வழங்கியது. இது மக்கள் சேவைக்கு கடற்படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கடந்த 14 ஆண்டுகளில், இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரணம் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், அரசாங்கத்திற்கு மில்லியன் கணக்கான நிதியையும் மிச்சப்படுத்தியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 2012 இல் கடற்படை சிறந்த நடுத்தர அளவிலான உற்பத்தியாளருக்கான தேசிய விருதைப் பெற்றது. இந்த கருவி 2011 இல் அழகுசாதன சாதனங்கள் மற்றும் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் சான்றளிக்கப்பட்டது. இது தேசிய சுகாதாரத் தர கட்டுப்பாடு தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.
உள்ளூர் சந்தையில் தலசீமியா கருவிகளை வழங்கும் நிறுவனங்கள் இல்லாததனால் கடற்படையின் பங்கு முக்கியமானதாக்கும். இது நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் நாட்டின் சுகாதார அமைப்பு மீதான நிதிச் சுமையைக் குறைக்கவும் உதவியுள்ளது.