கிழக்கு கரையோரப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத்
தடுக்க அரசு நடவடிக்கை

ஜூன் 19, 2025

திருகோணமலை முதல் பொத்துவில் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்னைகளை தீர்க்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

கிழக்குப் பிராந்தியத்தில் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்திலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிலும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளின் பாதகமான தாக்கத்தை எடுத்துரைத்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை கரையோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ ஏ. ஆதம்பாவா ஏற்கனவே கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.

அதேநேரம், 2025 ஜூன் 05ஆம் திகதி அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது பிரதி அமைச்சர் ஜயசேகர இந்த விடயத்தைப் பற்றி உரையாற்றினார். தனது கருத்துக்களில், பிரதி அமைச்சர் இந்தப் பிரச்சினையின் பாரதூரத்தை உணர்ந்து கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான மீன்பிடி நடைமுறைகளை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நிலைமையை மேலும் ஆராய, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) கடற்படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதியில் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் உட்பட சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான மூலோபாய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் விளைவாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) ஆகியோரின் பங்குபற்றுதலுடன இன்று (ஜூன் 19) பாராளுமன்றத்தில் கலந்துரையாடினர். 

நிலைமையை விரிவாக மதிப்பாய்வு செய்தல், மீன்பிடி சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமலாக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர். 

இதன் விளைவாக, இலங்கையின் கிழக்கு கடலோர நீரில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உடனடி தலையீடுகள், நடுத்தர கால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால உத்திகள் உள்ளிட்ட பல கட்ட அணுகுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அரச மற்றும் எதிர்க்கட்சி), இலங்கை கடற்படை, இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்கள, பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள்,கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.