“நீங்கள் அளவிடாததை உங்களால் நிர்வகிக்க முடியாது”: இலங்கை 2025 ஆம் ஆண்டு உலக நீர்வரைவியல் தினத்தைக் கொண்டாடுகிறது

ஜூன் 25, 2025

ஜூன் 24 அன்று வெலிசர வேவ்'ன் லேக் கடற்படை மண்டபத்தில் நடைபெற்ற 2025 உலக நீர்வரைவியல் தின ட(Hydrographic Day) கொண்டாட்டத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். "“Seabed Mapping: Enabling Ocean Action” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரமுகர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் நீர்வரைவியல் துறை நிபிணக்குகள் பலரும் கலந்துக்கொண்டனர். 

சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பால் (IHO) நிறுவப்பட்ட உலக ஹைட்ரோகிராஃபிக் தினம், கடல்சார் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடல் சூழலின் நிலையான வளர்ச்சியில் நீர்வரைவியல் தரவுகள் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.

இதன்போது உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) தேசிய வளர்ச்சி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான கடல் நிர்வாகம் ஆகியவற்றில் இத்துறையின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். "நீங்கள் அளவிடாததை நீங்கள் நிர்வகிக்க முடியாது." பயனுள்ள கடல் நடவடிக்கைகளை வடிவமைப்பதில் கடற்பரப்பு வரைபடபடுத்தலின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இலங்கையின் மூலோபாய கடல்சார் நிலையை எடுத்துரைத்து, பிரதி அமைச்சர் 2023 டிசம்பரில் இலங்கை தேசிய ஹைட்ரோகிராஃபிக் அலுவலகம் (SLNHO) நிறுவப்பட்டது. இலங்கை கடற்படையுடன் நெருங்கிய கூட்டாண்மையுடன் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் SLNHO, அத்துடன் ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுகள், வரைபடமாக்கல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான தேசிய அதிகாரசபையாக செயல்பட்டு வருகிறது.

"நீர்வரைவியல் என்பது மேலான ஓர் அறிவியலாகும், அது தேசத்திற்கு செய்யும் ஒரு சேவை" என்று அவர் கூறினார், நீலப் பொருளாதாரம் மற்றும் கடல்சார் மீள்தன்மைக்கான இலங்கையின் அபிலாஷைகள் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் ஹைட்ரோகிராஃபிக் தரவுகளில் தங்கியுள்ளன என்று குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல், தேவையான பணியாளர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் சர்வதேச நீர்வரைவியல் அமைப்பு மற்றும் வட இந்து சமுத்திர நீரியல் ஆணையம் போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் அதன் நீரியல் திறன்களை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை பிரதி அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்'.

பாதுகாப்பான வழிசெலுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை கொண்ட கடல்சார் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, பாதுகாப்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கரையோர சமூகங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகள் போன்ற பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் அணிதிரட்டல் போன்ற நடவடிக்கைகளுக்கான ஒன்றுபடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசர சமரசிங்க (ஓய்வு), இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் தெற்கு மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க (ஓய்வு), ஐஏஎல்ஏ சர்வதேச அகாடமியின் பீடாதிபதி, வைஸ் அட்மிரல் வின்சென்ட் டெனிமூர் (ஓய்வு), கடற்படையின் உயர் அதிகாரிகள், இலங்கை தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள், கல்வி நிபுணர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரப் படைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.