இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தனர்

செப்டம்பர் 02, 2025

மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு, நேற்று (செப்டம்பர் 1) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகராவை (ஓய்வு) மரியாதை நிமித்தம்  சந்தித்தனர்.

இலங்கையில் கல்வி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள சிரேஷ்ட இந்திய இராணுவ அதிகாரிகள் அடங்கிய இந்ததூதுக்குழுவை,  பிரதி அமைச்சர் அன்புடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது, பிரதி  அமைச்சர், தூதுக்குழுவுடன் பரஸ்பர முக்கியத்துவம்  வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உதவி  பாதுகாப்பு ஆலோசகரும் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.