“Pacific Angel 2025” பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது
செப்டம்பர் 13, 2025திங்கட்கிழமை (செப்டம்பர் 08) தொடங்கிய “Pacific Angel 2025” பயிற்சி நேற்று (12) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலங்கை விமானப்படை (SLAF) மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் கட்டுநாயக்கவில் ஏட்பாட்டில் நடைபெற்ற பயிற்சியின் நிறைவு விழா அதன் முடிவைக் குறித்தது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), அமெரிக்க தூதர் அதிமேதகு ஜூலி சுங் மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க ஆகியோருடன் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
Pacific Angel 2025, அனர்த்த மீட்பு மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்து-பசுபிக் பங்காளர்களை ஒன்றிணைத்தது. இந்தப் பயிற்சி, அமெரிக்க பசுபிக் படைகள், ரோயல் ஆஸ்திரேலிய விமானப்படை, ஜப்பான் விமான சுய-பாதுகாப்புப் படை, மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பங்களாதேஷ் விமானப்படை உட்பட இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இப்பயிற்சியில் விமான பராமரிப்பு, தேடல் மற்றும் மீட்பு, காடுகளில் உயிர்வாழ்வது, வான்வழி மருத்துவ நோயாளிகள் கொண்டு செல்லல், பாரிய விபத்துக்களின் போது மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய எட்டு பொருள் நிபுணர் பரிமாற்றங்கள் (SMEE) இடம்பெற்றன. விமானப்படையின் கட்டுநாயக்க, சீனக்குடா மற்றும் அம்பாறை தளங்களில் பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு பிராந்திய தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறை பயிற்சிகள் நடைபெற்றன.
பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அனைத்து பங்கேற்கும் நாடுகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். Pacific Angel - 2025 பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்துவதில் பிராந்திய விமானப்படைகளின் முக்கிய பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பயிற்சி இந்து-பசுபிக் பங்காளர்களுக்கிடையே இயங்குதன்மை மற்றும் அறிவுப் பகிர்வை வலுப்படுத்துகிறது, அதே நேரத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால கூட்டுறவையும் பிரதிபலிக்கிறது. இத்தகைய ஈடுபாடுகள் மீள்தன்மையை உருவாக்க, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த மற்றும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்க ஒரு முக்கியமான தளத்தை வழங்குகின்றன.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதிமேதகு ஜூலி சுங் இந்தப் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து , “Pacific Angel 2025 இந்த ஆண்டு இலங்கையில் நடத்தப்படும் மிகப்பெரிய பலதரப்புப் பயிற்சியாகும், மேலும் எங்கள் இந்து-பசுபிக் பங்காளர்களுடன் தோளோடு தோள் நிற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அனர்த்த மீட்பு முதல் மனிதாபிமான நெருக்கடிகள் வரை உலக சவால்களுக்கு நாங்கள் எவ்வாறு ஒன்றாகத் தயாராகிறோம் என்பதையும், பிராந்தியம் முழுவதும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைப் பாதுகாப்பதற்கான எங்கள் கூட்டுத் திறனை ஒத்துழைப்பு எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பதையும் இந்தப் பயிற்சி நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.
செயல்பாடுகளுக்கு மேலதிகமாக, பசுபிக் விமானப்படை இசைக்குழுவான “Final Approach” இலங்கை விமானப்படை இசைக்குழுவுடன் இணைந்து இசை நிகழ்ச்சி ஒன்றையும் நிகழ்த்தியது. இதற்கிடையில், அமெரிக்க விமானப்படை மற்றும் SLAF, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து, அகரகமவில் உள்ள பிரதேச மருத்துவமனையின் மறுசீரமைப்பு பணிகளை மேட்கொண்டன. இது உள்ளூர் சமூகங்களுக்கு நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Pacific Angel 2025, இந்து-பசிபிக் பங்காளர்களுக்கிடையே இலங்கையில் எவ்வாறு அருகருகே பணியாற்றுகிறார்கள் என்பதைக் காட்டியது.