பொது தின நிகழ்வில் போர் வீரர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்
ஒக்டோபர் 29, 2025போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அமைச்சின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (அக்டோபர் 29) பொது தின நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இது, மறைந்த வீரர்களின் குடும்பங்கள், ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற வீரர்களுக்கு, அவர்களின் குறைகள் மற்றும் கவலைகளை நேரடியாக நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
இந்நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு செயலாளர் அவர்களின் முறையீடுகளை பொறுமையாகக் கேட்டறிந்து, முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன் அவர்களின் நல்வாழ்வை நோக்கமாகக் கொண்ட அனைத்து நலத்திட்டங்களையும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வு, போர் வீரர்கள் மற்றும் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களின்h வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.