இலங்கைக்கும் புனித வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் பொன்விழா கொண்டாடப்பட்டது

நவம்பர் 05, 2025

இலங்கை மற்றும் புனித வத்திக்கானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவு விழா நேற்று (நவம்பர் 4) கொழும்பு Galle Face ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் வத்திக்கானில் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் Paul Richard Gallagher, கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் மற்றும் வெளியுறவு அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேராயர் Gallagher முக்கிய சொற்பொழிவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கௌரவ பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் உரையும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில்  அமைச்சர்கள், தூதுவர்கள், முப்படை தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் சமய பிரமுகர்களும்   கலந்து கொண்டனர்.