கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது NSA-நிலைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை - இந்தியா இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது
நவம்பர் 20, 2025கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தின.
2025 நவம்பர் 19ஆம் திகதி முதல் 20 ஆம் வரை புதுடில்லியில் இந்த மாநாடு நடைபெற்றது.
இலங்கைக் குழுவிற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்கியதுடன் இந்தியக் குழுவிற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் டோவல், KC. தலைமை தாங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர்.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஐந்து தூண்களுடன் இணைந்த பகுதிகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலை எதிர்த்தல், கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், சைபர் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் தொடர்பில் இக்கலந்துரையாடலின் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.