இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
ஜனவரி 13, 2026இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Srinivas Maddula, இன்று (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பு, இரு தரப்பினருக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. கடல்சார் மற்றும் பரந்த பாதுகாப்பு களங்களில் நீடித்த ஈடுபாடு மற்றும் மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் ககலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.