--> -->

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,372 ஆக அதிகரிப்பு

பெப்ரவரி 28, 2021

இன்று பெப்ரவரி 28ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 460 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82,889 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த முப்பத்தைந்து பேரும் இரத்னபுரி மாவட்டத்தை சேர்ந்த 62 பேரும், யாழ்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 59 பேரும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 51 பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 253 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 79,224 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 76,979 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 12,632 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 748 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,372 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4,053 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 96 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 9,667 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்று மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை. எனவே, வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 464 ஆக பதிவாகியுள்ளது.