--> -->

கடற்படையினரால் 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது

மார்ச் 08, 2021

கடந்த சனிக்கிழமை புத்தளம் சேரக்குளிய கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்போது 33 பைகளில் நிரப்பப்பட்ட உலர்ந்த மஞ்சள், மற்றும் இரண்டு வள்ளங்கள் என்பவற்றுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி மற்றும் பள்ளிவாசல்துறை பகுதிகளைச் சேர்ந்த 37 வயது தொடக்கம் 52 வயது வரை உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்கள் சகிதம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.