--> -->

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் படையினரால் உதவிகள்

மார்ச் 09, 2021

இலங்கை இராணுவத்தினரால் கர்ப்பிணி மற்றும் விதவைப் பெண்களுக்கு 1,000 உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு  யாழ், சுன்னாகம் தெற்கு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிவாரணப் பொதிகள்  மற்றும்  குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் என்பவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிகின்றன.

பிரபல தனியார் நிறுவனங்களின் அனுசரணையுடன், மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் கீழ் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின்  குடா நாட்டில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த செயற்றிட்டம் இடம்பெற்றது.

குறித்த திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் பயன் அடைந்தனர்.

இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.