--> -->

விமானப்படை அதிகாரிகளின் புதிய பிரதானி நியமனம்

மார்ச் 10, 2021

இலங்கை விமானப்படை அதிகாரிகளின்  பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ, மார்ச் 09ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டnபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படையின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தின் போது இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவிடமிருந்து எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.