--> -->

கிரிபவ மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தின் புனர் நிர்மாணப் பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுப்பு

மார்ச் 14, 2021

நீண்டகாலமாக தேவையுடைய நிலையில் காணப்பட்ட கிரிபவ மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தின் புனர்நிர்மான பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

கிரிபவ பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதியின் 'கம சமக பிலிசந்தர' எனும் கிராமத்துடன் உரையாடல் \திட்டத்தின்போது ஜனாதிபதியிடம் இந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த புனர்நிர்மான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இலங்கை இராணுவத்தின் 1வது பொறியியலாளர் படையணியின் மனித வலு மற்றும் நிபுணத்துவம் மூலம் இந்த புனர் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.