--> -->

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

ஏப்ரல் 27, 2021

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக
கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (ஏப்ரல் 27) காலை தெறிவித்தார்.

இதற்கமைய, ஹிங்குராக்கொடையில் உள்ள சிரிகேத கிராம சேவகர் பிரிவு மற்றும் மாத்தளை, உக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பல்லேகும்புற கிராம சேவகர் பிரிவு ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் நோக்கில் காலி மாவட்டம் ரதகம பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட இம்புலகொட மற்றும் கடுதம்பே ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் நேற்று மாலை 8.00 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மூன்று  மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு கிராம சேவகர் பிரிவுகள் இதற்கு முன்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.