--> -->

மேலும் 100,000 மரக்கன்றுகள் இராணுவத்தினரால் நடுகை

ஏப்ரல் 28, 2021

இலங்கை இராணுவம், எப்.வை.எப்.ஏ. தன்னார்வ அமைப்பு மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோருடன் இணைந்து வெலிகந்த, கவுதகல வனப்பகுதியில் 1000 உள்நாட்டு மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.

எதிர்வரும் இரண்டு ஆண்டுக்குள் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி (ஓய்வு), எப்.வை.எப்.ஏ தன்னார்வ நிறுவனத்தின் நிறுவனரும் பணிப்பாளருமான லசந்த நிர்மல், இராணுவ, சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெலிகந்த பிரதேச மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.