--> -->

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயில் மூடப்பட்டது

ஏப்ரல் 28, 2021

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலில் கடமை புரியும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே இந்த நுழைவாயிலை பயன்படுத்தவும் வாகனங்கள் இதற்குப் பதிலாக அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ நுழைவாயில்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இப்பாதையின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் மட்டும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்த நுழைவாயிலினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil