--> -->

வீதியோரங்களை சுத்தப்படுத்த இராணுவத்திற்கு யாழ் மக்கள் ஒத்துழைப்பு

ஏப்ரல் 30, 2021

திருநெல்வேலி முதல் நாவற்குழி வரையிலான வீதியோரங்களை சுத்தப்படுத்தும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு யாழ் பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் டெங்கு மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் தொற்று நோய்க் கிருமிகள் பரவுவதை தடுக்கும் வகையில் வீதியோரங்களில் உள்ள குப்பை கூளங்கள் மற்றும் கழிவுப் பொருட்கள்  என்பனவற்றை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கமைய சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிவில் சமூகத்துடன் இணைந்து சிரமதான அடிப்படையில் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.