--> -->

மத்திய கல்லூரி வளாகம் இராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டது

மே 01, 2021

தேவிபுரம் மத்திய கல்லூரி வளாகம் இராணுவத்தின் 18ம் விஜயபாகு காலாட்படை பிரிவினரால் அண்மையில் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டது.

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நல திட்டத்தின் ஒரு பகுதியாக 68வதுபிரிவின் பொது கட்டளைத்தளபதி பிரிகேடியர் கீர்த்தி பண்டாரவின் பணிப்புரைக்கமைய பாடசாலை வளாகம் வளாகத்தை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.