--> -->

கோல் டயலோக் - 2021 உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

மே 02, 2021

இலங்கை கடற்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கடல்சார் மாநாடான 'கோல் டயலோக் - 2021" கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இம்முறை ஏற்பாடு செய்யப்படும் இந்த சர்வதே கடல்சார் மாநாடு, இம்மாநாடு தொடரின் பதினோராவது தடவையாகும்.

‘உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான பிராந்திய கடல்சார் பாதுகாப்பு முயற்சிகள்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட இம்மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தை galledialogue.lk கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சர்வதேச கடல்சார் மாநாடு தொடர்பாக இலங்கை கடற்படையினரால் வழங்கப்படும் மேலதிக மற்றும் அண்மைய தரவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.