--> -->

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறது

மே 08, 2021

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகருமான கெளரவ மொஹமட் நஷீத்  மீது  06ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாக வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிக முக்கியமான நேரத்தில், மாலைதீவு அரசாங்கம் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இலங்கை அரசும் மக்களும்வன்முறையின் அனைத்து வடிவங்களையும் முழுமையாக கண்டிப்பதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.