--> -->

இராணுவத்தினரால் வைத்தியசாலை வார்டுகள் இடைநிலை பராமரிப்பு மையங்களாக மாற்றியமைப்பு

மே 10, 2021

அம்பலாந்தோட்டை பிராந்திய வைத்தியசாலையில் உள்ள வார்டுகள் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடைநிலை பராமரிப்பு மையங்களாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

12வது பிரிவின் மேற்பார்வையின் கீழ் 122வது பிரிகேட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குறித்த பணிகளில் ஈடுபட்டனர்.

பிராந்திய சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளுக்கு அமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.