--> -->

பொதுமக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் பொலிஸாருக்கு உதவி

மே 25, 2021

பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேல் மாகாணத்தில் பெரும்பாலும் நெரிசலான பகுதிகளில் விசேட அதிரடிப் படை வீரர்களுடன்   இராணுவ விரைவு செயலாற்றுகை  குழுக்கள், விஷேட ரைடர் குழுக்கள் மற்றும் இராணுவ ட்ரோன் பட்டாலியன் படைவீரர்களை  இராணுவம் அனுப்பியுள்ளது.

மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் பயண தடைகளை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் பொதுமக்களின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்கும் பொலிஸாருக்கு உதவும் இதேபோன்ற நடவடிக்கைகள் கடற்படை மற்றும் விமானப்படை படையினராலும்  மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.