--> -->

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

மே 25, 2021

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி , பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று (மே, 25)  சந்தித்தார். 

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையே கலந்துரையாடப்பட்டன. 

இந்த சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அயன் செய்னும் கலந்து கொண்டார். 

மேலும் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

கொவிட் - 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.