--> -->

கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கடற்படை வீரர்கள் இரத்த தானம்

மே 31, 2021

நாட்டில் ஏற்பட்டுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு இரத்த மாதிரிகளில் ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையின் கிழக்கு கட்டளையக கடற்படை வீரர்களினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த மாதிரிகளை குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்னவின் வழிகாட்டுதலுக்கு அமைய இந்த இரத்த தான நிகழ்வு திஸ்ஸ முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்டது.

இரத்ததான முகாமில் கிழக்கு கடற்படை கட்டளை அகத்தில் உள்ள சுமார் 275 கடற்படை வீரர்கள் பங்கு பற்றியுமை குறிப்பிடத்தக்கது.

Tamil