--> -->

ஸ்ரீ பாத மத அனுஷ்டான நிகழ்வுகளுக்கு இராணுவம் உதவி

ஜூன் 03, 2021

முன்னைய ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தவாறு ஸ்ரீபாத யாத்திரை காலம் நிறைவுற்றதை குறிக்கும் வகையில் வழிபாட்டிற்காக கொண்டுவரப்பட்ட சுமன சமன் விக்ரகம் உட்பட ஏனைய விக்ரகங்கள் ஸ்ரீபாத புண்ணிய தளத்திலிருந்து நல்லதண்ணி விகாரைக்கு 19வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வீரர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

வண. பெங்கமுவே தம்மதின்ன நாயகே தேரர் தலைமையில் நடைபெற்ற மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுடன் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்