--> -->

சுகவீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

ஜூன் 08, 2021

பலநாள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீனவர் ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார். கரைக்கு கொண்டு வரப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பேருவளைக்கு தென்மேற்காக 55 கடல்மைல் தொலைவில் உள்ள ஆழ்கடலில் பலநாள்  மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த மீனவர் சுகவீனமுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மீனவர் சுகவீனமுற்று இருந்த கடற்பரப்புக்கு விரைந்த கடற்படைக்குச் சொந்தமான சயுர கடற்படைக் கப்பலின் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்து கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.