--> -->

தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் மரக்கறிகள் இராணுவத்தினரால் விநியோகிப்பு.

ஜூன் 12, 2021

முல்லைத்தீவு பாதுகாப்பு படை சட்டத்தின் கீழ் உள்ள 59வது பிரிவின் படைவீரர்கள், அலம்பில், விடாகரை, கள்ளப்பாடு, செல்வபுரம், வன்னிகுளம், முள்ளியாவெளி மற்றும் வட்டுவாக்கல் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் மரக்கறிகளை அண்மையில் விநியோகம் செய்தனர்.

இதேவேளை,இராணுவத்தின் 2(V) இலேசாயுத படையணி வீரர்கள் வெள்ளம்பிட்டிய, கடுவெல மற்றும் களனிமுல்ல பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் நீர் போத்தல்களை விநியோகம் செய்துள்ளனர்.

நன்கொடையாளர்களிடம் பெறப்பட்ட நிதி உதவி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறு உலர் உணவு பொதிகள்  வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Tamil