--> -->

தோவ பிரதேசத்தில் 112வது பிரிகேட் படைவீரர்களினால் தீயணைப்பு பணிகள் முன்னெடுப்பு

ஜூன் 17, 2021

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 112 வது பிரிகேட் படைவீரர்கள், பண்டாரவளை பிரதேசத்தின் தோவ பகுதியில் உள்ள வெவேகொட மலைத்தொடரில் பரவிய காட்டுத் தீயினை வனவள துறையினருடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை, குறித்த படைவீரர்களினால் பதுல்லை மாவட்டத்தின் எலதலுவ தேமடவெல்ஹின்ன பிரதேசத்தில் ஏற்பட்ட தீ அணைத்து கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இப் பணியானது 112 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.