--> -->

சட்டவிரோத கஞ்சா செய்கையஇராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

ஜூன் 17, 2021

தனமல்வில பிரதேசத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கையினை அதாவது இலங்கை சிங்க படையணியின் படைவீரர்கள் அன்மையில் சுற்றிவளைத்தனர்.

வன பகுதியின் நடுவே சட்டவிரோதமாக இரண்டு ஏக்கர் நிலப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா, பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் பிடுங்கி அழிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 25 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தனமல்வில பொலிசாரினால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இருந்து போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கும் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.