--> -->

சீதுவை இடைநிலை சிகிச்சை மையத்திற்கு நன்கொடைகள் வழங்கிவைப்பு

ஜூன் 19, 2021

சீதுவை இடைநிலை சிகிச்சை மையத்தில் பயன்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காகவும் ஒரு தொகை நன்கொடை பொருட்கள் நன்கொடையாளர்களினால் இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நன்கொடை பொருட்களில் சுகாதார பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், பெட்ஷீட்கள், தலையணைகள், தலையணை உறைகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை அடங்கும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவ சேவைகள் படையணி மற்றும் இராணுவ புலனாய்வு படையணி ஆகியவற்றின் சேவா வனிதா பிரிவுகள், வரையறுக்கப்பட்ட ஹேமாஸ் உற்பத்தி நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஆரியா பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் என்பவற்றால் வழங்கப்பட்ட நன்கொடை பொருட்களை இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் பெற்றுக்கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்கொடை பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நிகழ்வில் நன்கொடையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.