--> -->

அம்பதாண்டேகம காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினர் மும்முரம்

ஜூன் 20, 2021

பண்டாரவளை, தோவ அம்பதாண்டேகம மலைப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

அம்பதாண்டேகம மலைத்தொடரில் தீ பரவல் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த படையினர், சில மணிநேரங்களுக்குள் வனப்பகுதி முழுவதிலும் தீப்பரவல் ஏற்படுவதை தடுத்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

112வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்க மேற்பார்வையின் கீழ் இந்த தீயணைப்பு பணிகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.