--> -->

வவுனியா ஆயுர்வேத வைத்தியசாலை இராணுவத்தினரால் இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றியமைப்பு

ஜூன் 23, 2021

வவுனியாவில் உள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலை, 100 கொவிட் -19 நோயாளிகளுக்கு  சிகிச்சையளிக்கக்கூடிய சகல மருத்துவ வசதிகளும் கொண்ட புதிய இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால்  மாற்றி அமைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளிடம் அன்மையில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் 56வது பிரிவின் பொது கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவிலவின் மேற்பார்வையின் கீழ்  சுகாதார பிரிவின் சுகாதார துறை ஊழியர்களின்  ஒத்துழைப்புடன் படை வீரர்களினால்  நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil