--> -->

ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ குழாத்தின் பணிகளுக்கு பாராட்டு

ஜூன் 23, 2021

மாலியில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ குழாம், பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் செயற்பாடுகள், வாகன பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை மேற் கொண்டமைக்காக ஐ.நா.அமைதி காக்கும் பணிகளின் படைத் தளபதியிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ குழாத்தின் படை முகாமிற்கு விஜயம் செய்த  ஐ.நா. அமைதி காக்கும் படைகளின்  தளபதி லெப்டினன் ஜெனரல் டென்னிஸ் கில்லென்ஸ்போர், பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகின்ற நிலையில் முகாம்களை நகர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்ற சவாலான நிலைக்கு மத்தியில் இலங்கை இராணுவத்தின் அமைதிகாக்கும் படையினர் சேவையாற்றும் விதத்தை கண்டு தான் வியந்து போனதாக இலங்கை அமைதிகாக்கும் படை முகாமின்  கட்டளைத் தளபதி லெப்டினன் கேர்ணல் தினேஸ் புலத்சிங்களவிடம் தெரிவித்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tamil