--> -->

அம்பகமுவவில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை இராணுவத்தினரால் அழிப்பு

ஜூலை 01, 2021

அம்பகமுவ மற்றும் தனமல்வில பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அவை பொலிஸாரின் மேற்பார்வை கீழ் அழிக்கப்பட்டன.

காட்டுப் பகுயின் நடுவே சுமார் 40 பேர்ச் நிலப்பரப்பில் சூட்சுமமான முறையில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை 121வது பிரிகேட்டின்கீழ் உள்ள 24வது சிங்க ரெஜிமென்ட் படையினர் பிடுங்கி அவற்றை அழிக்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.