--> -->

இராணுவத்தினரால் தியதலாவையில் சேதனப் பசளை உற்பத்தி ஆரம்பம்

ஜூலை 04, 2021

தியதலாவையில் உள்ள 1வது பொது சேவைகள் படையினரால் சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இராணுவத்தின் பொது சேவைகள் படையணியின் கேர்ணல் நிலை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஹந்துமுள்ளவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

சேதன உரங்களின் நன்மைகள் குறித்த சமூக விழிப்புணர்வை மேம்படுத்த இந்த திட்டம் திட்டமிட்டுள்ள அதேவேளை உள்ளூர் விவசாயிகளுக்கு தங்களது சொந்த சேதன உரங்களை உற்பத்தி செய்வதற்கு தொழில்நுட்ப உதவியை வழங்குகின்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது.