--> -->

15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டமை தொடர்பான ஊடக அறிக்கை

ஜூலை 07, 2021

15வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர், பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் வகையில் மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணரின் சேவையை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இலங்கை கடற்படை உடனடியாக அமுலுக்கு வரும் வைகயில் இடைநிறுத்தம் செய்துள்ளது.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த சம்பவம் குறித்து தனித்தனி உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைத் தளபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த நபர் இலங்கை கடற்படையின் எந்தவொரு கடற்படை தளத்திற்குளோ அதுசார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.