--> -->

கிளிநொச்சியில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு

ஜூலை 18, 2021

கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு வட்டக்கச்சி, பெரியகுளம் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. சிவசாமி முத்து குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள 6வது சிங்க ரெஜிமென்ட் படைவீரர்களின் மனிதவளம் மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவம் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டிற்கான நிதியுதவி புரவலர் ஒருவரினால் வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வீட்டு பாவனைப்பொருட்கள், உபகரணங்கள், உலர் உணவுப்பொதிகள், புதிய காய்கறிகள் மற்றும் பொதிகள் ஆகியவையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற புதுமனை குடிபுகு விழாவில் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.