--> -->

இலங்கை விமானப் படையினரால் உயிரிழந்த படை வீரர்கள் நினைவு கூறப்பட்டனர்

ஜூலை 20, 2021

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பங்குபற்றுதலுடன் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நேற்று (ஜூலை 19) சர்வ மத நினைவேந்தல் நிகழ்வு விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

தாய் நாட்டிற்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி நடைபெற்ற இந்த ஆண்டின் சர்வமத நிகழ்வு, தற்போதுள்ள கொவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக தனித்தனியாக நடத்தப்பட்டன.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமானப்படைத் தள கட்டளைத் தளபதி மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.