--> -->

அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிக்கரம்

ஜூலை 21, 2021

தனமல்வில பகுதியில் நடைபெற்ற ‘கம சமக பிலிசந்தரக்’ நிகழ்வின் போது பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதியின் கட்டளைகளுக்கிணங்க, இராணுவத்தினரால் சமீபத்தில் இரண்டு பாடசாலை விளையாட்டு மைதானங்களின் புனர் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.

மொனராகலை மாவட்டத்தில் உள்ள மெதகம தேசிய பாடசாலை மற்றும் ஹம்பேகமுவ உயர்தரப் பாடசாலை விளையாட்டு மைதானங்கள் 6வது கள பொறியாளர்கள் படையினரால் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு திட்டங்களும்அண்மையில் அந்தந்த அதிகாரிகளிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், இயந்திர பொறியாளர் படையணியின் மேற்பார்வையின் கீழ் ஆறு பாடசாலைகளில் அபிவிருத்தி மற்றும் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த திட்டங்களின் விளைவாக 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையவுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.