--> -->

திருகோணமலையில் இராணுவத்தினரால் இரத்ததானம் வழங்கிவைப்பு

ஜூலை 25, 2021

திருகோணமலையில் உள்ள இராணுவத்தினரால் அண்மையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வு திருகோணமலை வைத்தியசாலையில் உள்ள பிராந்திய இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்பட்டுள்ள இரத்த மாதிரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பன்குளத்தில் அமைந்துள்ள 6வது கவச வாகன படையணியின் தலைமையகத்தில் இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது,

இதில் 223வது பிரிகேட்டில் உள்ள 6வது கவச வாகன படையணி வீரர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.