--> -->

சேவா வனிதா பிரிவின் தலைவி தலைமையில் இரண்டாவது கலந்துரையாடல்

ஜூன் 29, 2019

சேவா வனிதா பிரிவின் தலைவி தலைமையில் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (ஜூன், 28) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி சோனியா கோட்டகொட அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் எதிகால நலன்புரி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறித்த கலந்துடையாடல் தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் நிதிப் பணிப்பாளர் திரு. ஏஏடிகே அதிகாரி, முப்படைகளின் நிர்வாக செயலாளர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவுகள், பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி கேர்ணல் ஒஎன் மனேஜ் மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.